சென்னை: கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதியவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். ஒன்றிய அரசு கூறிய அறுவுறுத்தல்களையே நாங்களும் கூறி வருகிறோம்.