தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர்- ஊட்டி சாலையில் லாரி கொக்கியில் சிக்கி பெயின்டர் பரிதாப பலி

Advertisement

குன்னூர் : நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள உபதலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மெல்கியூ ராஜன் (55). பெயின்டர். இவர், தினமும் காலை நேரத்தில் குன்னூர் சாலையில் உள்ள தேவாலயத்திற்கு சென்று ஜெபம் செய்தபின் பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதேப்போல் நேற்று காலையும் மெல்கியூ ராஜன், தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பாய்ஸ் கம்பெனி பகுதியை நோக்கி சென்றபோது பாய்ஸ் கம்பெனி அருகே ஊட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனத்தை முந்தி சென்றபோது லாரியின் இடதுபுறத்தில் உள்ள இரும்பு கொக்கியில் மெல்கியூராஜன் மாட்டி, சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்.

உடனடியாக லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு, இறங்கி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மெல்கியூ ராஜன் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். வெலிங்டன் போலீசார், லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Related News