தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகுல் குறித்து சர்ச்சை கருத்து; பாஜக எம்எல்ஏ மீது வழக்கு: கர்நாடக போலீஸ் அதிரடி

மங்களூரு: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மங்களூரு வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பரத் ஷெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகராட்சி உறுப்பினர் அனில்குமார் என்பவர் காவூர் போலீசில் அளித்த புகாரில், ‘நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, சிவனின் புகைப்படத்தை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவையில் காட்டினார். சிவனின் புகைப்படத்தை அவையில் காட்டி பேசியதற்காக, ராகுல்காந்தியை அறைய வேண்டும் என்று மங்களூரு வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பரத் ஷெட்டி பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார்.
Advertisement

முன்னதாக பாஜக எம்எல்ஏ பரத் ஷெட்டியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மங்களூரு மாநகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் எம்எல்ஏ பரத் ஷெட்டிக்கு எதிராக 351(3), 353 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக மங்களூரு நகர டிசிபி சித்தார்த் கோயல் தெரிவித்தார். மாநகராட்சி உறுப்பினர் அனில் குமார் அளித்த புகார் மற்றும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

 

Advertisement

Related News