தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: ஆதவ் அர்ஜுனா மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சையாக பதிவிட்டு அதை நீக்கினார். நேபாளம், இலங்கை போன்று புரட்சி ஏற்படுவதே ஒரே வழி என எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனே அதை நீக்கினார். இந்நிலையில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

அரசியல் கட்சியினருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கூடிய மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ஆதவ் அர்ஜுனாவின் பதிவு காண்பிக்கப்பட்டது இதனை பார்த்த நீதிபதி செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் கவனித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், வன்முறையை தூண்டுவது போல ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார். ஒரு சிறிய வார்த்தை பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும் நீங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என்றும், இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்றும் நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியதுடன். ஆதவ் அர்ஜுனாவின் சமூகவலைதள பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement