தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் கனமழையால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு: தொழிலாளர்கள் அவதி

 

Advertisement

மரக்காணம்: தொடர் கனமழை ெபய்ததால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமாக சுமார் 3,500 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யும் உப்பளங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வேதாரண்யம், தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் மரக்காணம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள உப்பளங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு மேலாகும்.

ஆனால் அடுத்த சில வாரங்களில் வடகிழக்கு பருவ மழை துவங்குவதால் கனமழை பெய்யக்கூடும். இதனால் இந்த ஆண்டிற்கான உப்பு உற்பத்தி இந்த மாதத்துடன் முடியும் நிலையில் உள்ளது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்ததால் கோடைகாலத்தில்கூட உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்ததாக கூறுகின்றனர். இதனால் பருவ மழை காலத்தில் உப்பின் விலை பல மடங்கு அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களும் போதிய வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். எனவே அரசு சார்பில் வழங்கப்படும் மழைக்கால நிவாரண உதவித்தொகையை அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement

Related News