தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பிளவக்கல் பெரியாறு அணையில் நீர் திறப்பு: குளம், கண்மாய்கள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வத்திராயிருப்பு: தொடர் மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், குளம், கண்மாய்கள் நீர் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 47 அடி உயரமுள்ள பிளவக்கல் பெரியாறு அணை அமைந்துள்ளது.

Advertisement

மாவட்டத்தில் மிகப்பெரிய அணையான இதன் மூலம் எஸ்.கொடிக்குளம், பெரியகுளம், விராகசமுத்திரம் கண்மாய் உட்பட 45 கண்மாய்களின் தண்ணீர் தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து கடந்த சில தினங்களாக வத்திராயிருப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 347 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து வினாடிக்கு 402 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News