தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதியாக குறைந்தது

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக இங்கு அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உற்பத்தி துவங்கி அக்டோபர் வரை 9 மாதங்கள் நடைபெறும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக 6 லட்சம் டன் இலக்காக வைத்து உப்பு உற்பத்தி செய்யப்படும். அதில் தொழிற்சாலைக்கு தேவையான 4 லட்சம் டன் உப்பு மற்றும் 2 லட்சம் உணவு உப்பு உற்பத்தி செய்யப்படும். இந்தாண்டு ஜனவரி முதல் அவ்வப்போது பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி அடிக்கடி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனால் இந்தாண்டு 50 ஆயிரம் டன் உணவு உப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான 2 லட்சம் டன் உப்பு உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. தற்போது உப்பு உற்பத்தி நிறைவு பெற்று விட்டது. ஆனால் வேதாரண்யத்தில் மழைக்கால விற்பனைக்காக 15,000 டன் உப்பு மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் 2026ம் ஆண்டு ஜனவரியில் தான் உப்பு உற்பத்தி துவங்கும். உப்பு குறைவாக இருந்தாலும் ஒரு டன் உப்பு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை மட்டுமே விற்பனையாகிறது.

Advertisement