தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு; வைகை அணை நிரம்பியது: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஆண்டிபட்டி: நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக 36வது முறையாக வைகை அணை இன்று காலை நிரம்பியது. இதையடுத்து தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது.

Advertisement

மூலவைகை ஆறு நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை நீர், முல்லைப்பெரியாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர், போடி கொட்டக்குடி ஆற்று நீர் ஆகியவை வைகை அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், கடந்த 17ம் தேதி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 67 அடியை எட்டியது.

கடந்த 2 நாட்களில் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் நேற்று அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் வினாடிக்கு 2,500 கனஅடி நீர் பிரதான 7 மதகுகள் வழியாக வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 3,630 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து 4,875 கனஅடி. நீர் இருப்பு 5,605 மில்லியன் கனஅடி.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும், நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில் உபரிநீரின் அளவு கணிசமாக அதிகரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணை பயன்பாட்டுக்கு வந்த 69 ஆண்டுகளில் 36வது முறையாக நிரம்பியுள்ளது. இதையடுத்து 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியாறு அணை 139 அடியை எட்டியது 152 உயரமுள்ள முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 139 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 7,054 கனஅடி. நீர் திறப்பு 1,400 கனஅடி. நீர் இருப்பு 6,748 மில்லியன் கனஅடி.

Advertisement

Related News