தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழை காரணமாக மார்லிமந்து அணையில் நீர்மட்டம் உயர்வு

*பொதுமக்கள் மகிழ்ச்சி
Advertisement

ஊட்டி : ஊட்டியில் பெய்த தொடர் மழை காரணமாக ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான மார்லிமந்து அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலை, கீழ் கோடப்பமந்து, மேல் கோடப்பமந்து உள்ளிட்ட அணைகள் விளங்கி வருகின்றன.

இந்த அணைகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சியின் 3,4-வது வார்டுகளை உள்ளடக்கிய வண்டிச்சோலை, சர்ச்ஹில், மார்லிமந்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மார்லிமந்து அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

இதேபோல ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களான பார்சன்ஸ் வேலி அணை, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மார்லிமந்து அணையிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 23 அடியில் தற்போது 18 அடி வரை நீர் இருப்பு உள்ளது.

ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையிலும், அணையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் இருந்து வர கூடிய நீரும் அணையில் சேருவதால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதனால் வண்டிசோலை, சர்ச்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை நீங்கியுள்ளது. இதனிைடயே மழை தொடர உள்ள நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டி விடும். இம்முறை குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்ததால் மார்லிமந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மார்லிமந்து அணையை நம்பியுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு ஏற்படாது, என்றார்.

Advertisement

Related News