தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் கனமழைக்காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

*ஏலகிரிமலை வெறிச்சோடியது

Advertisement

ஏலகிரி : தொடர் கனமழை காரணமாக ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் பல இடங்களில் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரிமலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இம்மலையை ஏழைகளின் ஊட்டி, மலைகளின் இளவரசி எனவும் அழைப்பர்.

இங்கு வாராந்தோறும் விடுமுறை நாட்களில் பல்வேறு வெளி மாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திரள்வது வழக்கம். இம்மலையில் உள்ள 14 கொண்டை ஊசி வளைவுகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும்.

இதேபோல் இங்குள்ள படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுத்தலங்கள், பறவைகளின் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக்குளம், ஸ்ரீ கதவநாச்சியம்மன் திருக்கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் இம்மலையில் உள்ளன.

இம்மலையில் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்றும், நேற்றுமுன்தினமும் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது.

இதன்காரணமாக படகு இல்லத்தில் பெரும்பாலான படகுகள் பயன்படுத்தப்படாமல் கரையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதேபோன்று தங்கும் விடுதிகள் உள்ளிட்டவையும் வெறிச்சோடி காணப்பட்டது. ஏலகிரிமலையில் திடீர் திடீரென சாரல் மழை பெய்துவருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது. இருப்பினும் மழைக்காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

Advertisement