தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் கனமழையால் கடல்போல் காட்சியளிக்கும் காமராஜர் சாகர் அணை

ஊட்டி : தொடர் மழை காரணமாக ஊட்டி காமராஜர் சாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சி அளிக்கிறது.மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மலைகளின் குறுகே அணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு அதன் மூலம் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மூலம் சுமார் 800 மெகாவாட்க்கும் மேல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஊட்டி- கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது.

Advertisement

இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு மாயார், சிங்காராவில் உள்ள மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர, கோடை காலங்களில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள்ள வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும்.இந்நிலையில், நடப்பு ஆண்டு கோடை காலத்திலும் ஓரளவிற்கு மழை பெய்தது.

அதன் பின் ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழையானது முன்கூட்டியே மே மாதம் துவங்கியது. துவங்கியது முதல் கனமழை கொட்டியது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா பகுதிகளிலும், அணைகள் அமைந்துள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்தது.

ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை பெய்த நிலையில் நீர்நிலைகள், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதேபோல் காமராஜர் சாகர் அணையிலும் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. தற்போது 50 அடிக்கும் மேல் நீர்மட்டம் உள்ளது. இதனை இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Advertisement

Related News