தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர்ந்து பெய்த மழையால் வனப்பகுதி நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க துவங்கியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மே மாதம் துவக்கம் வரை வெயிலின் தாக்கத்தால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வன பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் காணப்பட்டது.

இடையிடையே ஏப்ரல் மாதத்தில் கோடை மழை பெய்தாலும், அந்த மழையால் தண்ணீர் வரத்து என்பது போதியளவு இல்லாமல் போனது. இதனால், வனப்பகுதியில் உள்ள நீரோடை மற்றும் சிற்றருவிகளில் தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்தது. இதில், ஆழியார் அருகே உள்ள நவமலை நீரோடையில் தண்ணீர் வரத்தின்றி வறண்ட நிலையில் காணப்பட்டது. வன நீரோடைகளில் தண்ணீர் இல்லாததால் விலங்குகள் அடிக்கடி இடம்பெயர்ந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை பெய்ய துவங்கியது. அதன்பின் இரண்டு வாரத்துக்கு முன்பு மீண்டும் பருவமழை வலுத்தது. இதனால், வனப்பகுதியில் உள்ள சிற்றருவி, நீரோடைகளில் தண்ணீர் அதிகளவு வர துவங்கியது. அதிலும், நவமலை மற்றும் சர்க்கார்பதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.

கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வனத்திற்குள் பாயும் நீரோடைகளில் தடையை மீறி யாரேனும் சென்று நீராடுகிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News