தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீர்ப்பிடிப்பில் தொடரும் மழையால் வெள்ளப்பெருக்கு கும்பக்கரை அருவியில் 2வது நாளாக குளிக்க தடை

தேனி: நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு தொடரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 2வது நாளாக வனத்துறையினர் தடை விதித்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த அருவியில் தினமும் ஏராளமானோர் குளித்து செல்கின்றனர். அதிக நீர்வரத்து, வெள்ளப் பெருக்கின்போது அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

Advertisement

நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், பாம்பார்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் வனத்துறையினர் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற்றினர். அருவி பகுதிக்கு செல்லவும் தடை விதித்தனர்.

இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இதனால் இன்று 2வது நாளாக அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் கும்பக்கரை அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement

Related News