ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்!
Advertisement
ரேபிடோ நிறுவனம் முறையற்ற விளம்பரம் செய்ததாக ரூ.10 லட்சம் அபராதத்தை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. உத்தவாதமான ஆட்டோ, 5 நிமிடத்தில் ஆட்டோ, வராவிட்டால் ரூ.50 பெற்றுக்கொள்ளுங்கள் என்று விளம்பரம். ரேபிடோ விளம்பரங்கள் முறையற்றவை என்று தானாக முன்வந்து விசாரித்த நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முடிவு. ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த ஆணையம், உடனடியாக விளம்பரத்தை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
Advertisement