தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜ்நாத்சிங் வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை

Advertisement

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வீட்டில் ஒன்றிய அமைச்சர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய அரசு சார்பில் நேற்று திடீர் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜேபி நட்டா, கிரண் ரிஜிஜூ, பியூஷ்கோயல், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர்கள் எழுப்பும் கோரிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் அவர்கள் எழுப்ப உள்ள பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

Advertisement

Related News