தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு; ஆலங்குடி அரசு கல்லூரி திறப்பு எப்போது? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு

Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. இக்கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கு கீழாத்தூர் சமத்துவபுரம் அருகில் 12 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், அலுவலகம், முதல்வர், துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்களின் அறைகள், ஆவணக் காப்பகம், நூலகம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 50 ஆயிரம் சதுர அடியில், ரூ.12.40 கோடியில் 2 அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

கட்டிடத்தில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் எப்போது திறக்கப்படும் என தெரியவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, “கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு இக்கல்லூரி திறக்கப்படும். அதன் பிறகு, கல்லூரி செயல்படும்” என்றனர். இக்கல்லூரிக்கு பிற பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் வந்து செல்லும் வகையில் ஆலங்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மேலும், கல்லூரிக்கான சுற்றுச்சுவரையும் உடனே கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement