தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 3 ஆண்டுக்கு பின் துப்பு துலங்கியது சில்லி சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் தராததால் அடித்துக் கொன்றோம்

*கைதான இருவர் திடுக் வாக்குமூலம்
Advertisement

சத்தியமங்கலம் : கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். சில்லிசிக்கன் சாப்பிட்டு விட்டு பணம் தராததால் கல்லால் அடித்து கொன்றதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அடுத்துள்ள வெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தின் அருகே உள்ள குட்டையில் கடந்த 2021ம் ஆண்டு தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட நபர் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரங்கசாமி (56) என தெரியவந்தது. கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (37) தனசேகர் (36) ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனசேகர் என்பவர் புஞ்சை புளியம்பட்டி டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்ததும், பிரகாஷ் என்பவர் பார் அருகே சில்லி சிக்கன் கடை வைத்திருந்ததும் தெரியவந்தது.

கட்டிட தொழிலாளி ரங்கசாமி மது அருந்துவதற்காக டாஸ்மாக் பாருக்கும் அருகே உள்ள சில்லி சிக்கன் கடைக்கும் அடிக்கடி வந்து சென்ற நிலையில், சில்லி சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் தராததால் ஆத்திரமடைந்த பிரகாஷ், தனசேகர் இருவரும் சேர்ந்து கட்டிட தொழிலாளி ரங்கசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, சம்பவத்தன்று மது போதையில் இருந்த ரங்கசாமியை வெங்கநாயக்கன்பாளையம் அருகே உள்ள தண்ணீர் இல்லாத வறண்ட குட்டைக்கு அழைத்து சென்று கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு இருவரும் தப்பி சென்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து இருவரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் கட்டிட தொழிலாளி ரங்கசாமியை அடித்து கொலை செய்த வழக்கில் 3 ஆண்டுக்கு பிறகு தனசேகர், பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News