பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கட்டுமான பணிகளில் இனி பொதுப்பணித்துறையே ஈடுபடும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
Advertisement
பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் எழுதிய கடிதத்தில், உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்பக் கல்வித் துறை, கட்டிட வேலைகளை பொது பணித்துறைக்கு ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே, உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை இனி நேரடியாக மேற்கொள்ளும். இதுவரை கட்டுமான பணிக்காக செயல்பட்டு வந்த தொழில்நுட்ப கல்வி இயக்கம் கலைக்கப்படுகிறது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement