தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜராஜசோழனின் சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் அரங்கம் அமைக்கும் பணிகள்

*50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

Advertisement

தஞ்சாவூர் : ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் சதய விழா வரும் 31 மற்றும் நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த விழா, ராஜராஜ சோழனின் பிறந்த நாளை (ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில்) கொண்டாடும் வகையில் இரண்டு நாட்கள் நடைபெறும். இந்த விழாவிற்காக, கோவில் வளாகத்தில் சிறப்பு பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

உலகப்பிரசித்திப்பெற்ற தஞ்சை பெரியகோயில் உலக பாரம்பரிய சின்னமாகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். இதற்காக ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு 1040-வது சதய விழா வருகிற 31ம் தேதி, 1ம் தேதி ஆகிய நாட்களில் நடக்கிறது.விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் தகர சீட்டுகள் கொண்டு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக லாரிகள் மூலம் சவுக்கு கட்டைகள், தகர சீட்டுகள், ராட்சத ஏணிகள் ஆகியவை நேற்று முன்தினம் பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பெருவுடையார் சன்னதி அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement