தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலசப்பாக்கம் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.19.92 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி

*எம்எல்ஏ ஆய்வு

Advertisement

கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.19.92 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் நேற்று ஆய்வு செய்தார்.கலசப்பாக்கம் தொகுதியில், செய்யாற்றின் குறுக்கே பூண்டி மற்றும் பழங்கோயில் கிராமங்களை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுவிடம் வலியுறுத்தினர்.

அதன்பேரில், பழங்கோயில் மற்றும் பூண்டி கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.19.92 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்பணியை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் நேற்று நேரில் ஆய்வு செய்து, பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.அப்போது, ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகரன், நகர செயலாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement