தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய அரசியலமைப்பு சட்ட நாளில் நல்வழிகளை பின்பற்றி, சமூகநீதி, அடிப்படை உரிமைகளை உறுதி செய்வோம்: அன்புமணி

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்ட நாளில் அது காட்டும் நல்வழிகளை பின்பற்றி, சமூகநீதி, அடிப்படை உரிமைகளை உறுதி செய்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "இந்தியாவில் அனைத்து அமைப்புகளையும் விட வலிமையானதும், உயர்ந்ததும் அரசியலமைப்பு சட்டம் தான். அண்ணல் அம்பேத்கரால் வகுக்கப்பட்டு, இந்திய அரசியல் சட்ட அவையால் 1949ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 76-ஆம் ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் எந்த நாட்டிற்கும் கிடைக்காத சிறப்பான அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கிடைத்திருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை என்னவென்றால், அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அனைவருக்கும் சமூகநீதி வழங்கி, அடிப்படை உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வது தான். அதற்காக அறவழியிலும், அரசியல் வழியிலும் உழைப்போம்" என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Related News