அரசியலமைப்பு தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகள் பதவி: பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து
சென்னை: அரசியலமைப்பு தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகள் பதவி வகித்து வரும் பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்று முன்தினத்துடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிதனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “25 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்ட தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்று சாதனை படைத்ததற்காக, பிரதமர் மோடிக்கு அதிமுக தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது” என்று கூறியுள்ளார்.