தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாக்க உறுதி எடுப்போம்: ஜவாஹிருல்லா அறிக்கை

Advertisement

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாக்க உறுதி எடுப்போம் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டு மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், சமத்துவம், சமூக நீதி ஆகியவை உறுதிப்படுத்தப்பட்ட நாள் தான் அரசியலமைப்பு தினம். அம்பேத்கர் தலைமையில் உருவான அமைச்சரவை வரைவு குழுவின் பெரும் பங்களிப்பை நாம் அனைவரும் நினைவுகூர வேண்டியது அவசியம். அரசியல் அமைப்பு என்பது இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு. சாதி, மதம், மொழி, பிராந்தியம் என்பதனை தாண்டி அனைவரும் சமமான குடிமக்களென அறிவித்த வரலாற்று சாசனமாக அமைந்துள்ளது. நமது அரசமைப்பு சட்டம்.

ஆனால் இத்தகைய முன்னேற்றமான, மனிதநேயமான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட வேளையில், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் உட்பிரிவு அமைப்புகள் தொடர்ந்து அதனை விமர்சித்து வந்தன என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. நாட்டின் அரசியல் அமைப்பு மீது தாக்குதல் ஏற்படும் பொழுது அதை எதிர்க்கும் மக்கள் இயக்கங்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க இது மிகவும் அவசியம்.அதன்படி, அரசமைப்பின் முகப்புரையை வாசித்து அரசு அலுவலர்கள் உறுதி எடுக்கும் நிகழ்வை முன்னெடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News