தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை கேலிக்கூத்தானது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

சென்னை: தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முதலில் எச்சரித்தார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

தொகுதி மறுசீரமைப்பு:முதலில் எச்சரித்தவர் முதல்வர்

தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முதலில் எச்சரித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்த பிறகுதான் மற்ற மாநில முதலமைச்சர்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றினர். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கும் என முதலமைச்சர் தெளிவாக சொன்னார்.

இபிஎஸ் அறிக்கை கேலிக்கூத்தானது: ஆர்.எஸ்.பாரதி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை கேலிக்கூத்தானது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கேவலமாக கூட எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுவார். எடப்பாடி பழனிசாமி கூறுவதை பற்றி கவலைப்படவில்லை; மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டிற்கு மோடி 8 முறை வந்தும் திமுகதான் வென்றது. 8 முறை தமிழ்நாடு வந்தபோதும் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் ஜெயித்தோம். பிரதமர் மோடி 8 முறை வந்தும் கூட பாஜகவின் ரிசல்ட் பூஜ்ஜியம்தான் என்றார்.

Related News