தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாஜக சதி.. தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்: ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை!!
Advertisement
தற்போதுள்ள விகிதாச்சாரப்படி தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். வெற்றிகரமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பலவீனப்படுத்த பாஜக சதி செய்கிறது. தெற்கில் தாங்கள் காலூன்றாததால், தென்மாநிலங்களை அரசியல் மற்றும் நிதி ரீதியாக பலவீனப்படுத்த பாஜக சதி செய்வதாகவும், அதனை தடுக்க வேண்டுமெனவும் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டினார். தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement