தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர்ந்து பெய்த மழையால் சேறும் சகதியாக மாறிய சாலை

*சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
Advertisement

மானாமதுரை, நவ.6:மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார் நகரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டதால் ரோடுகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. ரோட்டை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார் நகர் 20 ஆண்டுகளுக்கு முன் உருவாகியது.

தற்போது அங்கு 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதி மாங்குளம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்த போது சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டிருந்தது. இப்பகுதி கடந்த ஆண்டு மானாமதுரை நகராட்சியுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அலங்கார் நகர், மேட்டுத்தெரு பகுதியில் நகராட்சி சார்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்க சிமெண்ட் ரோட்டை உடைத்து குழாய்கள் பதிக்கும் பணி கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.உடைக்கப்பட்ட பகுதியில் ரோடு போடாத நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள மெயின் ரோடுகள், முக்கிய தெருக்கள் மக்கள் கால் வைக்க முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அத்தியாவசிய தேவையான பால், காய்கறி கூட வாங்க வெளியே சென்று திரும்பி வர முடியாத அளவிற்கு சிரமப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இப்பகுதி உருவாகி இருபதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. முக்கிய தெருக்களுக்கு மட்டும் சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதன்பின் இன்னும் சில பகுதிகளுக்கு தார்ச்சாலை அமைக்கவில்லை.கடந்த செப்டம்பர் மாதம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப்புகளை பதித்தபின் ரோடை சரி செய்யாமல் ஒப்பந்ததாரர் உள்ளார். இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாத ரோடு படுமோசமாக உள்ளது. எனவே நகராட்சி ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு ரோட்டை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் நிரந்தர சாலையை ஏற்படுத்தவும் வேண்டும் என்றார்.

Advertisement

Related News