தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோதினால் கடும் விளைவுகள் ஏற்படும்: இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தானுடன் மோதினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. குஜராத் மாநிலம் பூஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் கடந்த வாரம் நடந்த விஜயதசமி விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் ஏதேனும் தவறான முயற்சிகளில் ஈடுபட்டால், அது வரலாற்றையும், புவியியலையும் மாற்றக்கூடிய வகையில் பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார்.

Advertisement

இதேபோல், இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, “ பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் அழிக்கப்படும்” என கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தியாவின் எச்சரிக்கை தொடர்பாக பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் வௌியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகள், அவர்களின் இழந்த நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சி. வருங்காலங்களில் பாகிஸ்தானுடன் இந்தியா எந்த விதமான ராணுவ மோதல்களிலும் ஈடுபட கூடாது. மீறி ஈடுபட்டால் முழு பலத்துடன் இந்தியாவுக்கு பதிலடி தருவோம்” என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement