தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுவேந்து அதிகாரி, தபாஸ் ராய்க்கு எதிரான சிபிஐ வழக்குகள்: பாஜவின் வாஷிங்மெஷினால் கழுவப்பட்டு விட்டதா?.. பிரதமர் மோடிக்கு காங். கேள்வி

Advertisement

புதுடெல்லி: சுவேந்து அதிகாரி, தபாஸ் ராய்க்கு எதிராக சிபிஐ வழக்கு முடங்கியது ஏன் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘மேற்கு வங்க மாநில ரேசன் கடைகளில் பிரதமரின் முகத்தை காட்டாததற்காக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

பிரதமரின் புகைப்படங்கள், விளம்பர பலகைகளை வெளியிடும்படி மாநில அரசை வற்புறுத்தும் முயற்சியாக இது உள்ளது. ரூ.7000 கோடி நெல் கொள்முதல் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது மாநிலத்தின் நெல் கொள்முதல் மற்றும் பொது விநியோகத்திட்டத்திற்கான அரிசி கிடைப்பதை கடுமையாக பாதிக்கும். மக்களுக்கு அன்றாட உணவு கிடைப்பதை விட பிரதமரின் விளம்பரம் முக்கியமா? சுவேந்து அதிகாரி, தபாஸ் ராய்க்கு எதிரான சிபிஐ வழக்கு முடங்கியது ஏன்? அவர்களின் வழக்குகள் பாஜவின் வாஷிங் மெஷினால் கழுவப்பட்டுவிட்டதா?” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News