தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: விளவங்கோடு புதிய பெண் எம்எல்ஏ பேட்டி

சென்னை: காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று புதிதாக பதவியேற்றுக் கொண்ட பெண் எம்எல்ஏ கூறினார். விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட தாரகை கத்பர்ட் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சபாநாயகர் முன்னிலையில் நான் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இன்றைக்கு என்னை சட்டமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர்.
Advertisement

அதற்காக பெருமூச்சாக உழைத்த, காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சியான திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், எங்களுக்கு உறுதுணையாக இருந்து 41 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதற்கான அனைவருக்கும் நன்றி. இந்த நேரத்தில், திமுகவுக்கு முக்கியமாக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், என்னை முதலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தாலும் திருநெல்வேலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மேடையில்தான் என்னை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போதே, எனக்கு வெற்றி கனியை பறிப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்தது. நான் நிற்பதாக நினைத்து அவருக்கு (தாரகை) வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் என்னை அறிமுகப்படுத்தினார். முதல்வர் செய்த அனைத்து திட்டங்களுக்கு கிடைத்த வெற்றிதான் எனக்கு கிடைத்த வெற்றி.

எனக்கு இன்னும் 2 வருடம்தான் இருக்கிறது. காமராஜர் ஆட்சியில் கொண்டு வந்த கோதையார் அணையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். விளவங்கோடு தொகுதியில் மக்களின் அத்தியாவசிய தேவையான சாலை, குடிநீர் மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பாடுபடுவேன். காங்கிரசில் எப்போதும் பெண்களுக்கு பதவியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்போது முன்னாள் எம்எல்ஏ பற்றி பேசி பயன் இல்லை. முன்னாள் எம்எல்ஏவுக்கும் காங்கிரசில் பல பதவிகள் கொடுக்கப்பட்டது. காங்கிரசில் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ஒரு பெண்தான் இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News