தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு பணி கூட்டம்: மேலிட பார்வையாளர் ரகுவீரரெட்டி வருகை

சென்னை: மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு பணி கூட்டத்தில் பங்கேற்க மேலிட பார்வையாளர் ரகுவீரரெட்டி வருகை தர உள்ளதாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோரது வழிகாட்டுதல் படி, மாவட்ட காங்கிரஸ் தலைமையின் மறு சீரமைப்பு பணிகள் மாநிலங்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டிலும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் மாவட்ட வாரியாக பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு அங்கமாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பார்வையாளராக ரகுவீரரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

அவருக்கு உதவிடும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவுப்படி, முன்னாள் தலைவர் தங்கபாலு, துணை தலைவர் மணிரத்தினம், செயலாளர்கள் ஜெயபிரகாஷ், தயானந்த் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில், கட்சியின் தற்போதைய பலம், கள நிலவரம், வருங்கால வளர்ச்சி குறித்த ஆலோசனை, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை வழங்க வருகை தர உள்ளனர். அதன்படி, வரும் 29ம்தேதி காலை 10 மணிக்கு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம், திருவல்லிக்கேனி கோயில் தெரு எம்.எஸ்.மகாலில் நடைபெற உள்ளது.

30ம்தேதி துறைமுகம் தொகுதி பிராட்வே பிரகாசம் ரோட்டில் உள்ள மித்ரன் பார்ட்டி ஹால், 1ம்தேதி ஆயிரம் விளக்கு தொகுதிக்கு, சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் உள்ள மீனாட்சி மகால், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள விநாயகா ஹாலிலும் நடைபெறுகிறது. 3ம்தேதி சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுடன் சந்திப்பு, 4ம்தேதி மனுதாரர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News