தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்எஸ்எஸ் குறித்து இழிவாக பேசிய காங்கிரஸ் எம்எல்ஏவை மேடையிலேயே கைது செய்த மத்திய பிரதேச போலீஸ்

Advertisement

போபால்: ஆர்எஸ்எஸ் குறித்து சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் எம்எல்ஏவை மேடையிலேயே மத்திய பிரதேச போலீஸ் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அசோக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சாகேப் சிங் குர்ஜார் பேசுகையில், ‘ஆண்மை உள்ளவர்கள் போருக்குச் சென்றனர்; திருநங்கைகள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தனர்’ என்று மிகவும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கூறினார். எம்எல்ஏவின் இந்தப் பேச்சுக்கு, அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேடையின் அருகே நின்றிருந்த போலீசார், அடுத்த சில நிமிடங்களில் மேடையேறினர். அவர்கள் எம்எல்ஏ சாகேப் சிங் குர்ஜார், வெறுப்பு பேச்சு பேசியதாக கூறி அவரை கைது செய்வதாக அறிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எம்எல்ஏ சாகேப் சிங் குர்ஜாரை அங்கிருந்து போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். எம்எல்ஏ உரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் பெரும் புயல் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏவின் பேச்சுக்கு மாநில பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக அமைச்சர் விஸ்வாஸ் சாரங், ‘தாங்களே தவறு செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க அரசியலமைப்பையே அவமதிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத கமல்நாத், அஜய் சிங் போன்ற மூத்த தலைவர்களையே எம்.எல்.ஏ சாகேப் சிங் திருநங்கைகள் என்று கூறுகிறாரா?; முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், ஜித்து பட்வாரி போன்ற மூத்த தலைவர்கள் இருந்த மேடையில் இப்படியொரு பேச்சை பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எம்எல்ஏவின் பேச்சு, மூன்றாம் பாலினத்தவரை மட்டுமல்ல, பெண்களையும் அவமதிக்கும் செயல்’ என்றார்.

Advertisement

Related News