தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரஸ் குறித்து அவதூறு மாஜி அமைச்சர் மீது எஸ்பியிடம் புகார் மனு

தேனி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கடந்த 15ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது, கட்சியை கலைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு காங். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக தேனி நகர காங். தலைவர் கோபிநாத் தலைமையில் நிர்வாகிகள் நேற்று தேனி மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என பேசியுள்ளார். மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement