தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் சிறையில் போதை மாத்திரை கஞ்சா பறிமுதல் : 4 கைதிகள் மீது வழக்கு

புழல்: புழல் சிறைக் கைதிகளிடம், செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க அவ்வப்போது சிறைக்காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, புழல் சிறையில் காவலர்கள் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் சோதனை செய்தபோது, 60 கிராம் கஞ்சா, 14 போதை மாத்திரைகள் சிக்கியது.
Advertisement

தொடர்ந்து, சிறைக் காவலர்கள் விசாரித்ததில், திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை சென்றபோது, நண்பர்கள் மூலமாக கிடைத்த கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகளை ஆசனவாயில் அடைத்து சிறைச்சாலைக்குள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சிறைக் கைதிகளிடமிருந்து 60 கிராம் கஞ்சா, 14 போதை மாத்திரைகள் ஆகியவற்றை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், புழல் சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், புழல் போலீசார் கிருபாகரன், சொட்டை செல்வா, அஜித்குமார், நரேந்திரகுமார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News