தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிறந்த நாளையொட்டி வீச்சரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட கண்டக்டர் கைது: அரிவாள் கொடுத்த நண்பரும் சிக்கினார்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு வள்ளுவர் சிலை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பார்த்தசாரதி (23). மினி பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். பார்த்தசாரதிக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி இவர் தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பட்டாக்கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் இருப்பது போன்ற போட்டோக்களை ரீல்ஸ்சாக வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதை பார்த்த திருவாரூர் எஸ்பி கருண் கரட் உத்தரவின்படி முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்தசாரதி, அவருக்கு வீச்சரிவாள் கொடுத்த முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காட்டை சேர்ந்த சக்திவேல் மகன் அய்யப்பன் (22) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement