தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிறப்பு, இறப்பு பதிவுச் சான்றுகளை பெற நிபந்தனைகள்: பதிவுத்துறை உத்தரவு

சென்னை: பதிவுத்துறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற புதிய நிபந்தனைகளை விதித்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பிறப்பு, இறப்பு விவரங்களை, சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. தற்போது, மருத்துவமனை வாயிலாக இந்த விவரங்கள் பெறப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்படுகின்றன.
Advertisement

ஆனாலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு விவரங்களின் நகல்கள், பல்வேறு நிலைகளில் மக்களுக்கு தேவைப்படுகின்றன. இது தொடர்பான நகல்கள் தேவைப்படுவோர், எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெறலாம். இதுபோன்ற விவரங்களை பெற, பதிவுத்துறை புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: என்ன காரணத்துக்காக சான்றிதழ்களை கேட்கிறார் என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக, யாருடைய பிறப்பு, இறப்பு விவரங்களை கேட்கிறாரோ, அவருக்கு இன்னார் இந்த உறவு முறை என்பதை தெரிவிக்க வேண்டும். மனுவில், இந்த விவரங்கள் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை சார் பதிவாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மனுதாரரின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக உத்தரவுகள் இருந்தாலும், இந்த விஷயத்தில் சார் பதிவாளர்கள் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்த நிபந்தனைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News