தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு புகார் பெரியார் பல்கலை நூலகர் இயக்குனரிடம் விசாரணை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

Advertisement

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி வழங்கியதில், அரசுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் இழப்பீடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் நூலகர், உடற்கல்வி இயக்குனரிடம் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஒரு பக்கம் போலீசாரும், இன்னொரு பக்கம் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு பிரிவில் பெரியார் பல்கலைக்கழகம் மீது மோசடி, ஊழல் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் ஒரு பிரிவினருக்கு பதிலாக இன்னொரு பிரிவினருக்கு, இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி வழங்கியது, அவர்களுக்கான ஊதியம் வழங்கியது என ரூ.40 லட்சத்திற்கு மேல் பல்கலைக்கழகத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

மேலும் லஞ்சம் பெற்று பணி நியமனம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இப்புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலகர் ஜெயப்பிரகாஷ், உடற்கல்வி இயக்குனர் வெங்கடாசலம் ஆகியோரிடம், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

அடுத்த கட்டமாக பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆடிட்டர், துணைவேந்தர் ஜெகநாதனிடமும் விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement