தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை: மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்

சென்னை: "கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தொண்டர்கள் எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். தொண்டர்களை அமைதிப்படுத்த முடியாமல், புத்தி தடுமாற்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மீது பாய்ந்து வருகிறார் எடப்பாடி" என கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட , பொறுப்பிகளை வைத்திருக்க கூடியவர் கவனமாக பேச பேண்டும். எடப்பாடி மெகா கூட்டணி அமைக்கப்போவதாக ஆரவாரமாக முழங்கினார். அது நடைபெறாத காரணத்தினால் விரக்தியில் விழுந்திருக்கிறார்.

துரோகத்தின் அடையாளமாக நடமாடி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லாதவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். இனி எப்போதும் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பாஜகவுடன் வைத்திருந்த கூட்டணி குறித்து தெரிவித்திருந்தார்.

அவர் வாழும் வரை அவரின் உறுதிமொழியை காப்பாற்றினார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தவர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார். அந்த கட்சியை சிதறு தேங்காயாய் உடைத்து நொறுக்கி தெருவில் எறிந்துவிட்டு கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எந்த தகுதியில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.