தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பில் இருந்து முத்தரசன் விடுவிப்பு?

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பிலிருந்து முத்தரசன் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன். இவர் 2015ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2019 மற்றும் 2022ம் ஆண்டுகளிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று முறை அப்பொறுப்பை வகித்து வருகிறார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு சேலத்தில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்களை விவாதித்து வருகின்றனர்.

குறிப்பாக முத்தரசன் 75 வயதை எட்டியதாலும், மூன்று முறை மாநிலச் செயலாளர் பதவியை வகித்துவிட்டதாலும், கட்சி விதிகளின்படி அவர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில் பல்வேறு அரசியல் சிக்கல் காலகட்டத்தில் சரியான முடிவு எடுத்து கட்சியை நடத்தி வருகிறார். மேலும், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சரியாக வளர்த்து வருவதால் அவருக்கு பொறுப்பு நீட்டிக்கப்படலாம் என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை முத்தரசன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால், துணை நிர்வாகப் பொறுப்பில் உள்ள வீரபாண்டியன், சந்தானம் அல்லது பெரியசாமி ஆகியோரில் ஒருவர் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும், அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு, கட்சியின் தேசிய தலைமை அவரையே அப்பொறுப்பில் தொடரச் செய்யவும் வாய்ப்பிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.

Related News