நீதிமன்ற நடைமுறையால் சாதாரண மக்கள் சோர்ந்து விடுகின்றனர்!: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து
Advertisement
சிறப்பு லோக் அதாலத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 14,045 வழக்குகளில், 4,883 வழக்குகள் பட்டியலிடப்பட்டு 920 வழக்குகள் தீர்க்கப்பட்டன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த சிறப்பு லோக் அதாலத்தில் கலந்து கொண்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘நீதிமன்ற நடைமுறையால் சாதாரண மக்களின் மனம் சோர்ந்துவிடுகிறது. பொதுமக்களின் வீடுகளுக்கே நீதியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே லோக்
அதாலத்தின் நோக்கம். அதனால் மக்களில் சிலர் லோக் அதாலத்தை நாடுகின்றனர்’ என்றார்.
Advertisement