தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய உதவி கமிஷனர் உள்பட 29 போலீசாருக்கு பாராட்டு: கமிஷனர் அருண் வெகுமதி வழங்கினார்

சென்னை: சென்னையில் போதை பொருள் ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய உதவி கமிஷனர் உள்பட 29 போலீசாரை நேரில் அழைத்து கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார். சூளைமேடு பகுதியில் போதை பொருள் விற்ற பாஜ மாநில பெண் நிர்வாகி மகன் பூர்ணசந்திரன் (21), பிரதாப், ஜனார்த்தனன் (27), அப்துல் வாசிம் (22) ஆகியோரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா சிங், உதவி ஆய்வாளர்கள் ஜெயராஜ், வெங்கடேஷ், தலைமைகாவலர் ராம்திலக், காவலர்கள் அஸ்வின் குமார், சுதாகர், நவீன்குமார், வேல்முருகன் கைது செய்தனர்.

Advertisement

அதேபோல் அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி உதவி ஆய்வாளர்கள் ஜெயகணேஷ், மாதவன், தலைமை காவலர்கள் சதீஷ்குமார், பிரபாகரன், மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழு கடந்த மாதம் 8ம் தேதி கிண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஜெபஸ்டின், இசக்கி ராஜா, தளவாய் மதன், இசக்கி முத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஓட்டேரி பகுதியில் பல்வேறு கொலை வழக்குகளில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி யாதவ வீரா (எ) ஜானகிராமன் (38) என்பவரை கடந்த மாதம் 14ம் தேதி அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் தமிழ்வாணன், உதவி ஆய்வாளர்கள் நிர்மல்குமார், ரமேஷ்பாபு, சிறப்பு உதவி ஆய்வாளர் முகமது யாசியா, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சிவபாலகுமார், தலைமை காவலர்கள் சந்திரசேகரன், சிவகுமார், தேவஸ்ரீகுப்புராஜ் ஆகியோர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா, ஒரு பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர அரியானா மாநிலம் போலீஸ் அகாடமியில் நடந்த 74வது அனைத்து இந்திய விளையாட்டு போட்டியின் ஆணழகன் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற சைதாப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் புருஷோத்தமன், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆயுதப்படை தலைமை காவலர் செல்வகுமார் என உதவி கமிஷனர் உள்பட 29 போலீசாரை கமிஷனர் அருண் தனது அலுவலகத்திற்கு நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

Advertisement