தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடன்பிறப்பே வா' என்ற தலைப்பின் கீழ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பின் கீழ் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் வகையில் திமுக சார்பில் உடன்பிறப்பே வா' என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொரு தொகுதி வாரியாக தொகுதி நிர்வாகிகளை முதமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து சந்தித்து நேர்காணலை நடத்தி வருகிறார்.

Advertisement

அந்த நிகழ்வின் போது ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள களநிலவரம் குறித்து அந்த தொகுதி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறியக்கூடிய நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய தினம் மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இருக்கக்கூடிய நேர்காணலினை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிர்வாகிகளை சந்தித்து அந்த தொகுதிகளுடைய நிலவரம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து வருகிறார்.

இதுவரை 29 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெற்றுள்ளது. இந்த 29 நாட்களில் 65 சட்டமன்ற நிர்வாகிகளை அந்தந்த தொகுதிகளின் களநிலவரம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்திருக்கிறார். இந்த நிலையில் இன்றைய தினம் 30வது நாளாக மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் திமுகவின் களநிலவரம் குறித்தும், சட்டமன்ற தேர்தலுக்கு ஆயுத்தமாகக்கூடிய பணிகள் எந்த வகையில் நடைபெற்று வருகின்றன.

எந்தெந்த பணிகளை அந்த தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தொகுதி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கேட்டு வருகிறார். இந்த நிகழ்வின் போது அந்த தொகுதிகளின் பொறுப்பாளர், அமைச்சர் சக்கரபாணியும் உடன்பிறப்பே வா களநிலவர நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News