தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான கொலிஜியத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு தாமதிப்பது ஏன் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஹர்ஷ் விபோர் சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த காலஅவகாசம் இல்லாததால் நீதிபதி நியமனங்களை அறிவிப்பதில் ஒன்றிய அரசு தன்னிச்சையாக தாமதப்படுகிறது எனவும் கூறப்பட்டிருந்தது.
Advertisement

இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகி, ‘‘இதுதொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து பெற்ற சில தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. அத்தகவல்களை பொது வெளியில் வெளியிடுவது நீதித்துறைக்கோ, நீதிபதிகளுக்கோ நன்மை தராது. எனவே அந்த தகவல்கள் மற்றும் எனது பரிந்துரைகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய விரும்புகிறேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News