தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தூர் அணைப்பகுதியில் கை கழுவியபோது முதலை கவ்விச்சென்ற கல்லூரி மாணவன் பலி

 

Advertisement

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சி, சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வேண்டாமணி. இவர்களது மகன் முனீஸ்வரன்(19). திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை கண்ணன், மகன் முனீஸ்வரன் ஆகிய இருவரும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, வனப்பகுதியில் விட்டுள்ளனர். பின்னர் முனீஸ்வரன் சாத்தனூர் அணை தண்ணீர் தேங்கும் பகுதியான பெரிய மலை வேடியப்பன் கோயில் அருகே கை, கால்களை கழுவுவதற்காக நீரில் இறங்கினார்.

அப்போது, தண்ணீரில் இருந்து திடீரென வெளியே வந்த முதலை முனீஸ்வரனின் காலை கவ்வி நீருக்குள் இழுத்துச்சென்றது. இதனால் அலறி துடித்தார். தகவலறிந்த சாத்தனூர் அணை போலீசார், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் தேடினர். பின்னர், 100 மீட்டர் தொலைவில் உள்ள பாறைக்கு அருகே காலில் பலத்த காயங்களுடன் முனீஸ்வரன் சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மாணவன் சடலத்தை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரைணயில், முனீஸ்வரன் உடலில் வேறு எங்கும் காயம் இல்லாத நிலையில், முதலை இழுத்து சென்றபோது நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

 

Advertisement