தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி

Advertisement

*கலெக்டர் தலைமையில் ஆலோசனை

விழுப்புரம் : கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்வது குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் 25ம்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற சிறப்பான நிகழ்ச்சி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரால் புதுமைபெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 25ம் தேதி மாலை 4 மணி முதல் அனைத்து கல்லூரி மாணவர்களையும் வண்ணத்திரை மூலமாக நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க செய்வதற்கான ஏற்பாட்டினை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தயார் செய்திட வேண்டும்.

மேலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே அவரவர் பெற்றோர்களிடம் தகவல்களை தெரிவித்திட அறிவுறுத்த வேண்டும். அன்று மாலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு எவ்வித இடையூறும் இல்லாமல் மாணவர்கள் செல்வதற்கு பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரிகளில் காவல் துறையின் மூலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் திண்டிவனம் சப்-கலெக்டர் ஆகாஷ், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் மலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News