தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தில் இறந்த கல்லூரி பேராசிரியர் குடும்பத்திற்கு ரூ. 1 1/2 கோடி நஷ்டஈடு: கடலூர் கோர்ட் உத்தரவு

கடலூர்: விபத்தில் இறந்த கல்லூரி பேராசிரியர் குடும்பத்திற்கு ரூ. 1 1/2 கோடி நஷ்டஈடு வழங்க கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் - 6 சேர்ந்தவர் கதிர்வேல். என்.எல்.சி. அதிகாரி. இவருடைய மனைவி மலர்விழி.சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

Advertisement

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 12 -ம் தேதி சிதம்பரம் - கீரப்பாளையம் சாலையில் வயலூரில் மோட்டார் சைக்கிளில் மலர்விழி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லோடு வேன் மோதியதில் மலர்விழி காயம் அடைந்து சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த பேராசிரியர் மலர்விழி கணவர் கதிர்வேல், மகன் கார்த்திக் வேல் ஆகியோர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர்கள் மூலம் நஷ்ட ஈடு வழக்கு கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 2 யில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இறந்த பேராசிரியர் மலர்விழி குடும்பத்தாருக்கு ரூபாய் ஒரு கோடியே 6 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 7.5 சதவீதம் , செலவு தொகையுடன் என மொத்தம் ரூ. 1 1/2 கோடி நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.

Advertisement