தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கு : சந்துருவின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி

சென்னை: கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் சந்துருவின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காதல் விவகாரத்தில் அயனாவரம் கல்லூரி மாணவர் நிதின்சாயை கார் ஏற்றி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜாமீன் கோரி சந்துரு தாக்கல் செய்த மனு கடந்த ஜூனில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்துரு, 2-வது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

அந்த மனுவில், மனுதாரர், நண்பர்கள் வந்த கார் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் காரை வேகமாக இயக்கினர். துரதிர்ஷ்டவசமாக நிதின்சாய் பயணித்த டூவீலர் மீது கார் மோதியது; மனுதாரர் காரை ஓட்டவில்லை. கல்லுாரி மாணவரான மனுதாரர் 26 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுதாரர், நண்பர்கள் காரில் துரத்தி சென்று மோதியதால் நிதின்சாய் இறந்ததாக போலீஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம். காரை நண்பர் ஓட்டினாலும், நிதின் சாய் மீது மோதத் தூண்டியது மனுதாரர் என தெரிவித்து சந்துருவின் ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

Advertisement