தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; ஒடிசாவில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம்: ரயில் மறியல், பேரணியால் பதற்றம்

Advertisement

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில், ஒருங்கிணைந்த 2ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர். கல்லூரியின் கல்வியியல் துறை தலைவரான பேராசிரியர் சமீரா குமார் சாஹு, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மனம் உடைந்த மாணவி, கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்து உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜ அரசை கண்டித்தும், மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க்கட்சிகள் இணைந்து நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தை நடத்தின. அனைத்து மாவட்டங்களிலும் பேரணி, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது. கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

சில இடங்களில் மாணவர் சங்கத்தினர், தெருக்களில் டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் மோகன் சரண் மஜ்ஹியின் வீட்டிற்கு அரகே பாதுகாப்பு படை வீரர்களுக்கும், காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பந்த் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisement