தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் ஆலோசனை கூட்டம்; 1995ல் இருந்த சந்திரபாபு நாயுடுவை பார்ப்பீர்கள்: அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் எச்சரிக்கை

திருமலை: ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணை முதல்வர் பவன்கல்யாண், மாநில அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள், எஸ்பிகளுடன் அந்தந்த மாவட்டம் வாரியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: கடந்த 5 ஆண்டில் ஆந்திராவை அனைத்து துறைகளிலும் 5 ஆண்டுகளில் சீரழிவு செய்து 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுள்ளனர். விஷன் 2047 எனும் தொலைநோக்கு பார்வையுடன் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.
Advertisement

வரும் நாட்களில் மக்களுக்கு சேவை செய்வதற்காக எனது பணிகள் இருக்கும். நான் பணி செய்வதுடன் உங்களையும் பணி செய்ய வைப்பேன். நான் செல்லும் இடங்களில் மக்கள் தெரியாமல் இருக்க திரைகள் தொங்கவிடுவதும், மரங்களை வெட்டுவதும் கூடாது. 1995ல் இருந்த சந்திரபாபு நாயுடுவை பார்ப்பீர்கள். இன்னும் அந்த வேகத்தை நீங்கள் எட்டவில்லை. விரைவில் திடீர் சோதனைக்கு வருவேன். அன்று அமைச்சர்களும் அதிகாரிகளும் ஓடினர். நாங்கள் வேலை செய்வோம், உங்களையும் வேலை செய்ய வைப்போம். அனைத்து துறைகளிலும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

Advertisement

Related News