தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளி

*ஆவணங்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு
Advertisement

நாகர்கோவில் : மகளுக்கு திருமண உதவித்தொகை விண்ணப்பித்து கிடைக்கவில்லை என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளி ஆவணங்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.குமரி மாவட்டம் திருவட்டாறு, செங்கோடி, மதிலகம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்து மாமரத்து அடியில் அமர்ந்து பிச்சை எடுப்பதாக கூறி பிளக்ஸ் போர்டு வைத்து போராட்டத்தை நடத்தினார்.

தமிழக அரசால் தொழிலாளியான எனக்கு வழங்கப்பட அரசு கட்டுமான தொழிலாளர் நலவாரிய அட்டையை பயன்படுத்தி இதனால் வரை எனக்கு எந்த உதவியும் தரப்படவில்லை. இந்த நிலையில் மகள் திருமண உதவித்தொகை பெறுவதற்கு தொடர்பாக விதிகளின் படி விண்ணப்பித்து எனக்கு இதுவரை உதவித்தொகை தராமல் அரசு அலுவலர் தேவையில்லாமல் அலைக்கழித்து வருகிறார்.

எனவே தொழிலாளர் நல அதிகாரி மீது நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும், மகளிர் திருமண உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தி அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர், தன்னிடம் இருந்த நலவாரிய அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தீயிட்டு கொளுத்த முயன்றார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அதனை தடுத்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement