தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோத்தகிரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை-கலெக்டர் வழங்கினார்

ஊட்டி : முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து கோத்தகிரியை சேர்ந்த இரு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

Advertisement

ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கிக்கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 109 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோத்தகிரி கன்னேரிமுக்கு மற்றும் கொணவக்கரை பகுதியை 2 மாணவிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார்.

மேலும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 2024-25 கல்வியாண்டில் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு விழாவினை சிறப்பாக முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சிறப்பாக கொண்டாடியதில் விழுதுகள் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கூடலூர் வட்டம், எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுனில்குமாருக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பழனிசாமி, கண்ணன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement